Wednesday, September 30, 2009

முகமூடி


காலை வேளையில் என் முகமூடி ஒன்றனக்கு திலகம் இட்டேன் ...
எனக்கென என்ன செய்தாய் என்று பழித்தது என் முகம் ...
உண்மைதான் என் முகத்திற்கென என்ன செய்தேன்?
விவரம் தெரிந்த நாள் முதல் பலருக்ககாக பல முகமூடிகளை அணிந்திதிருக்கிறேன்...
என் முகத்தை மட்டுமே ஏந்தி இருந்தால் இச்சமூகம் என்னை பாடாய் படுத்தியிருக்கும்...
வெள்ளித் திரையில் காட்டப்படும் கதை நாயகர்கள் மட்டுமே சமூக அநீதிகளை எதிர்கொள்ள இயலும் ...
அவர்களும் நிஜ வாழ்க்கையில் ஏதாவதொரு முகமூடியுடனேயே திரிகின்றனர் ...
சிக்கல்கள் அற்ற வாழ்கையை மேற்க்கொள்ள குறைந்த பட்சம் ஐந்து முகமூடிகளாவது அனைவருக்கும் தேவைப்படுகின்றன...
இப்படி நான் பிதற்றிக் கொண்டிருக்கும் வேளையில் ,"உன் நிலைமை எவ்வளவோ மேல்;உன் முகமூடிகள் இன்னும் உன் தன்மானத்தை கவரவில்லையே"! என்றது சுவரொட்டியில் இருந்த ஒரு அரசியல்வாதியின் படம் ...
தன்மானத்தை விற்று ஜீவனம் நடத்துவது எவ்வளவு கொடுமை!!! ...
இறைவா உமக்கு நன்றி இந்நாள் வரையில் தன்மானத்தை விற்கும் முகமூடிகளை என்னை அணியாமல் காத்ததற்காக...
இவ்வுலகை விட்டு என் உடல் அழியும் வேளையில் எஞ்சி நிற்ப்பது தன்மானம் ஒன்றேனும் இருக்கட்டுமே....
சமூகம் ஒரு புறம் இருக்க, திருமணத்திற்கு பின்னர் எந்தையிடமும் தாயிடமும் கூட கடுஞ்சொல் கூறா இன்முக முகமூடியையே அணிகிறேன்...
அவர்கள் விரும்பவில்லை எனினும் என் மனம் முகமூடியையே ஏனோ விரும்புகுகிறது....
காதல் திருமணம் செய்ததற்கான தண்டனை ....
எனக்கு நானே கொடுத்துக்கொண்டது...
மற்ற பிற உறவுகள் என்றும் நிலைத்திருக்க வேண்டியிருப்பின் அதற்கான பிரத்யேக முகமூடிகள் தேவைப்படத்தான் செய்கின்றன...என் செய்ய ?
" உன்னவனை மறந்தாயடி " என்றது ஒரு கூக்குரல் ...
கூக்குரலில் உண்மை இருந்தது ...
என்னை ,என் கோபங்களை உண்மை சிரிப்பை ஏந்தும் என் முகமூடி அற்ற முகத்தை என்றும் ஏற்றுக்கொள்பவன் என்னவன் தாயுமானவன்...
என்னவன் என் நண்பனும் ஆனதால் பிழைத்தேன்...
இல்லையேல் என் முகம் கடைசி வரை பல முகமூடிகளுக்கிடையிலேயே சிக்கித் தவித்திருந்திருக்கும் ....
இறைவா உமக்கு மீண்டும் நன்றி....

No comments: